PEN FRIEND
2ன்ட் ஷிப்ட் முடிச்சிட்டு கிளம்ப கொஞ்சம் லேட்டாயிருச்சு... அதனால ரெகுலரா போக வேண்டிய ட்ரெய்னை மிஸ் பண்ணிட்டேன்.... வரப்போற ட்ரென்தான் லாஸ்ட் ட்ரெய்ன்... நல்ல வேளை இதையாவது மிஸ் பண்ணாம வந்து சேந்தேனே.... என்னை நானே நொந்து கொண்டிருந்த வேளையில் தூரத்தில் நம்பிக்கை நட்சத்திரமாய் என் கடைசி ட்ரெய்னின் ~ஹட்லைட் தெரிந்தது...
ட்ரெய்ன் ஹார்ன், மகாபாரதச் சங்கு போல ஒலித்தது....
பயங்கர காலியாக இருந்த அந்த ட்ரெய்ன் எந்த அவசரமுமில்லாமல் ப்ளாட்ஃபாரத்தில் வந்து நின்றது...
ஏறினேன்...
உள்ளே யாருமில்லை....
அந்த காலி கம்பார்ட்மெண்ட் சற்றே பயமுறுத்தலாக இருந்தாலும்... ஒரு பக்கம் கவர்மெண்ட் நமக்கென்று தனியாக ஒரு ட்ரெய்ன் விட்டிருப்பதை எண்ணி கொஞ்சம் பெருமைப் பட்டுக்கொண்டேன்....
அடுத்த ஸ்டேஷன் வந்தது.... என் ஸ்டேஷன் வர இன்னும் குறைந்தது 20 நிமிடாவது ஆகும் என்பதால் ரொம்ப ரிலாக்ஸாக இருந்தேன்....
ஒருவன் மட்டும் ஏறினான்... சுற்றும் முற்றும் பார்த்தான்.... ஏனோ என் எதிரில் வந்து உக்காந்தான்.... சே... இவ்வளவு எடம் இருந்தும் இங்கேயே வந்து உக்காந்து நம்ம ப்ரைவசிய கெடுக்கிறானே என்று கொஞ்சம் கோபம் வந்தது...
நான் என் பேகிலிருந்து இன்றைய பேப்பர் ஒன்றை எடுத்து சு டோ கு புதிரிருந்த பக்கத்தை திருப்பினேன்...
சு டோ கு ஒன்றின் விடையைக் கண்டெறிந்தேன்.... ஆனால் அதை பேப்பரில் எழுத என்னிடம் பேனா இல்லை.... என் எதிரில் உக்காந்திருப்பவனிடம் பேனா இருந்தது....
கேக்லாமா வேண்டாமா....?
ஏதோ ஒருவித ஈகோ என்னை தடுத்தது... ஆனால் நான் அவன் சட்டைப் பாக்கெட்டிலிருக்கும் பேனாவையே பார்த்துக்கொண்டிருந்ததை கவனித்துவிட்டான்...
அவனே பேனாவை எடுத்துக் கொடுத்தான்....
இந்தாங்க சார்... யூஸ் பண்ணிக்கோங்க.... என்று பேனாவை என்னிடம் ஈகோயில்லாமல் கொடுத்தான்
அசடு வழிந்துக் கொண்டே தேங்க்ஸ் என்றேன்...
ட்ரெய்ன் படுவேகமாக போக்கொண்டிருந்தது...
அந்த பேனாவின் மூடி மிக அழுத்தமாக மூடப்பட்டிருந்தது.... அதை திறக்க முயற்சி செய்து முடியாமல் திணறிக்கொண்டிருந்தேன்....
கொடுங்க சார் நானே ஓபன் பண்ணித் தர்றேன்....
நோ.. நோ... நானே பண்ணிக்கிறேன்.... மறுபடியும் என் ஈகோதான்...
பலமனைத்தையும் பிரயோகித்து... ஒரு வழியாக திறந்துவிட்டேன்....
அந்த நேரம் பார்த்து ட்ரெய்னின் வேகம் காரணமாக காற்று பலமாக வீசியது... என் மடியிலிருந்த அந்த சு டோ கு பேப்பர் திசைக்கொறு பக்கம் பறந்தது.... அதை பிடிப்பதற்காக என் கைகளை பலத்த வேகமாக அசைக்க... ட்ரெய்ன் ஏதோ காரணமாக 'சடன் பிரேக்'கடித்து நின்றது....
ஒரு சின்ன நிசப்தம்... என் கைகள் பேப்ரை பிடித்திருந்தது... ஆனால்.... ஆனால்....
பேப்ரை விலக்கி பார்த்ததும்.... அய்யோ....
என் கையிலிருந்த பேனாவின் கூர்முனை... என் எதிரில் உக்காந்திருந்தவனின் தொண்டையில் ஆழமாக இறங்கியிருந்தது... அவன் வார்த்தை ஏதும் வராமல் கண்களை விரித்துக் கொண்டு திணறிக்கொண்டிருந்தான்...
அடக்கடவுளே....
அவன் தொண்டைக்குழியிலிருந்து இரத்தம்... அவன் சட்டை முழுவதும்....
சே... இப்படியா நடக்கும்....
வெளியே திடீரென்று சங்கு ஒன்று சத்தமாய் ஒலித்தது... இல்லையில்லை அது சங்கு இல்லை ட்ரெய்ன் ஹார்ன் சத்தம்....
பதட்டத்தில் என் மூளை தப்பாக வேலை செய்கிறது....
அடுத்து என்ன செய்வது... அடுத்த ஸ்டேஷனில் இறங்கிவிட வேண்டும்...
அடுத்த ஸ்டேஷன் வந்தது... இறங்கினேன்...
ஒருவன் அதே கம்பார்ட்மெண்டில் ஏறினான்...
என்னைத் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டே ஏறினான்... என் உள்ளே வேறு பயம் தொற்ற ஆரம்பித்தது... ஒரு வேளை இவன் என்னை நாளை போலீசில் அடையாளம் காட்டிவிட்டால் என்ன செய்வது...
ஓடிப்போய் மீண்டும் ட்ரெய்னில் ஏறினேன்.... நான் நினைத்தது போலவே அவன் துடித்துக்கொண்டிருந்தவனின் தொண்டையிலிருந்து பேனாவை வெளியே எடுத்துக் கொண்டிருந்தான்.... அவன் சரிந்து விட்டான்...
இவன் பேனாவுடன் திரும்பி என்னிடம் வந்தான்....
டேய் நீதானே இவனைக் கொண்ணுட்ட... உண்மையைச் சொல்லு... என்று மிரட்டினான்
கொஞ்சமும் யோசிக்காமல் அவனை பிடித்து ட்ரெய்னுக்கு வெளியே தள்ளி விட்டேன்... ஓடுகின்ற ட்ரெய்னில் இருந்து விழுந்த அவன் உடல் துண்டு துண்டாய் சிதறியது....
சே... ஒரே இரவில் நான் இப்படி 2 கொலை செய்வேன் என்று சத்தியமாக நினைத்து பார்க்கவில்லை....
2 வாரங்களுக்குப் பிறகு...
அதே ஸ்டேஷன்...
ஓரளவுக்கு சகஜ நிலைக்கு திரும்பியிருந்தேன்.... மீண்டும் ஆஃபீசில் லேட் ஆனதால் இன்று அதே ட்ரெய்னை பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது...
வழக்கம் போல் ட்ரெய்ன் காலியாக வந்தது...
ஏறினேன்... உள்ளே ஒரு இனம் புரியாத நடுக்கம்...
அடுத்த ஸ்டேஷன்.... யாரும் ஏறவில்லை... ட்ரெய்ன் மெதுவாக ஊர்ந்து அந்த ஸ்டேஷனை தாண்டியது....
என் தோளில் ஒரு கை விழுந்தது...
அய்யோ... அலறியடித்துத் திரும்பினேன்.... அவன்தான்... அவனேதான்... எனக்கு பேனா கொடுத்தவன்தான்.... அய்யோ பேயாக வந்திருக்கிறான்....
கத்தலாமா வேண்டாமா என்று நான் நினைக்கும்போது அவனே பேசினான்....
பயப்படாதீங்க.... நான்தான்... எனக்கும் ஒண்ணும் ஆகல.... ஜஸ்ட் ஒரு சின்ன இன்ஜூரி... இதோ பாருங்க பேண்டேஜ் போட்டிருக்கேன்... இன்னும் 2 நாள்ல சரியாயிடும்...
நிம்மதி பெருமூச்சு விட்டேன்....
ஆமா அந்த பேனா உங்ககிட்டத்தான் இருக்கா..? என்று கேட்டான்...
அப்போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது... அய்யோ... நான் இவனைக் கொன்றதை போலீசில் சொல்லிவிடுவான் என்று நினைத்து அநியாயமாக ஒருவனை ட்ரெயினிலிருந்து தள்ளி துண்டு துண்டாக சிதறடித்து சாகடித்தேனே....
சாரி சார் அது மிஸ் ஆயிடுச்சி... என்றேன்....
பரவாயில்லை என்றவன்... வந்து நின்ற அடுத்த ஸ்டேஷனில் இறங்கிவிட்டான்....
மீண்டும் தனியாக ட்ரெய்னில் போய்க் கொண்டிருந்தேன்....
என் காலடியில் ஏதோ இருந்தது எடுத்தேன்... பேனாவின் மூடி... அதே பேனாவின் மூடி.... இது... இது எப்படி இங்கே வந்தது...
இந்த மூடியின் பேனா நான் தள்ளிவிட்டவன் கையிலிருந்ததை நினைக்கும்போது எனக்குள் ஏதோ ஒரு பய அமிலம் உழன்று என்னை கலவரப்படுத்தியது...
அப்போது திடீரென்று
டேய்... என்று குரல்....
நான் அமர்ந்திருந்த ஜன்னலுக்கு வெளியே கேட்டது... திரும்பி பார்த்தேன்....
அய்யோ... நான் ட்ரெய்னிலிருந்து தள்ளிவிட்டவன்...
ஓடும் இரயிலில் ஜன்னலுக்கு வெளியே அடிப்பட்ட இரத்தக்காயங்களுடன் என்னைப் பார்த்து கோரைப் பற்களுடன் முறைத்துக் கொண்டிருந்தான்.... கையில் அதே பேனாவை என்னை குத்தும் தோரணையில் பிடித்திருந்தான்... அவனின் கைகளில் 3 விரல்கள்தானிருந்தது...
Harish Narayan