அவளும் ஒரு பெண்தான்
பார்க் ரெயில்வே ஸ்டேஷனில் தாம்பரம் செல்லும் மின்சார ரயில் ஹார்ன் அடித்து கிளம்பியது. ஃபாஸ்ட் புட் கலாச்சாரத்தில் வளர்ந்ததால் பரபரப்பு வாழ்க்கைக்கு உந்தப்பட்டவன் நான். அதனால் ரன்னிங்கில் ஓடிப்போய் ட்ரெயினில் ஏறினேன். மதிய வேளை என்பதால் கூட்டம் அவ்வளவாய் இல்லை. ஜன்னலோர இருக்கை கிடைத்தது. ட்ரெயினில் போவது சுகம் என்றால் ஜன்னலோரம் அமர்ந்து கொண்டு ட்ரெயினில் போவது மேலும் சுகம். அதை வார்த்தைகளில் சொல்லி மாளாது... அனுபவிக்க வேண்டும்.
நான் அனுபவித்துக் கொண்டிருந்தேன்...
பாட்டு பாட வேண்டும் என்று தோன்றியது.... என்ன பாட்டு பாடலாம் என்று மனதிற்குள் பிடித்த பாட்டுகளை ஓடவிட்டு கொண்டிருந்தேன்... அப்போதுதான் அவளை கவனித்தேன்....
என் எதிர் சீட்டில்...
வெகு அழகாய்...
சே... இவளைப் பார்க்காமல் நாம் பாட்டு பாடிக்கொண்டிருந்தால் நான் வாழ்க்கையை ரசிக்கத் தெரியாதவன் என்றல்லவா ஆகிவிடும்... என்று அவளை ரசிக்க ஆரம்பித்தேன்...
ரோஸ் கலரில் அவள் கன்னம்...
சிகப்பு இதழ்கள்...
இப்படி கவிதையாய் இருந்தாள்...
பெயர் என்னவாகயிருக்கும் என்று யூகிக்க ஆரம்பித்துக் கொண்டிருந்தேன்....
அருகில் அவள் தாயும் அமர்ந்திருந்தாள்.... அவள் தாயிடம் உங்கள் மகளின் பெயரென்ன என்று கேக்கலாமா..? சே... நாமாக பேசினால் என்ன நினைப்பார்களோ என்னவோ என்று அஞ்சினேன்...
இப்போது அவளும் என்னைப் பார்த்தாள்...
பார்த்தது மட்டுமல்ல என்னைப் பார்த்து சிரிக்கவும் செய்தாள்....
எனக்கு இருப்புக் கொள்ளவில்லை... இவ்வளவு அழகா...
இப்போதும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்...
எனக்கு மிகவும் பரவசமாகயிருந்தது.
மீண்டும் சிரித்தாள்...
உடனே அவளுக்கு ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் போலிருந்தது... அருகிலிருக்கும் அவள் தாயை எண்ணி சற்று தயங்கினேன்... சற்று நேரம் கழித்து துணிச்சல் வரவழைத்து அவளை தூக்கி என் மடியில் வைத்துக் கொண்டு ஒரு முத்தம் கொடுத்தேன்...
"உன் பேரென்ன...?" என்று கெஞ்சலாய் கேட்டேன்....
"அம்ம்ம்யயயா..." என்றாள் மழலை மொழியில்....
அவள் தாய் சிரித்துக் கொண்டே சொன்னாள்... "அவ பேரு ரம்யா.. அதத்தான் அவ அப்படி சொல்றா... இன்னும் சரியா பேச ஆரம்பிக்கல... 2 வயசுதானே ஆவுது... இனிமேதான் நல்லா பேசுவா...." என்றாள்
"ஹாய் ரம்யா குட்டி... புஜ்ஜிக்குட்டிஈஈ..." என்று ஆசைதீர அழைத்தேன்....
- Harish Narayan
2 comments:
Hi Harish Its realy nice this story and fantastic.
hahaha ... hareesh ....
vayasu kolaaru ;-) idhai padikkiravanukku :P
very beautiful composing ....
Rgds
Vasanth
Post a Comment