பைக் ஓட்ரதுன்னா எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்... ஆனா இன்னிக்கு எனக்கு அது சுவாரஸ்யமா தெரியில... ஏன்னா என் மனசு சரியில்லை... அதுக்கு காரணம்... என் வீட்ல குட்டி பொண்ணுக்கு உடம்பு சரியில்ல...
வீட்ல குழந்தைங்களுக்கு உடம்பு சரியில்லன்னா.... வெளியில நமக்கு வேலையே சரியா போறதில்ல... அந்த கஷ்டம் குழந்தை வச்சியிருக்கிறவங்களுக்குத்தான் தெரியும்....
பொதுவா எனக்கு ஜோசியத்தில நம்பிக்கை இல்லாமத்தான் இருந்தது... ஆனா 2 நாளைக்கு முன்னாடி நான் பிஸினஸ் விஷயமா கரூர் போயிட்டு பஸ்ஸில ரிட்டர்ன் வந்துக்கிட்டிருந்தப்போ என் பக்கத்துல ஒரு பெரியவர் உக்காந்துக்கிட்டு வந்தார்... ரொம்ப நேரமா என்னையே முறைச்சி பாத்துக்கிட்டிருந்தார்... அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சி நீ கட்டிட பிஸினஸ்தானே பண்றேன்னு கரெக்டா சொன்னார்... என்னால அத நம்பவே முடியல... அப்புறம் என்னைப் பத்தி என்னென்னவோ சொன்னவர் கடைசியா என் பொண்ணுக்கு ஒரு பெரிய கண்டம் இருக்குன்னு சொல்லிட்டு இறங்கிட்டார்.... அவர் சொன்ன மாதிரியே இன்னிக்கு என் பொண்ணுக்கு உடம்பு சரியில்லாம போயிருக்கு... அவர் என்கிட்ட கொடுத்த விசிட்டிங் கார்டு இருந்தது ஞாபகம் வந்தது... அதான் அவரை நேர்ல போயி பாத்துட்டு வரலாம்னு பைக்கில போயிட்டிருக்கேன்...

2 மணிநேரம் கழித்து....
மறுபடியும் இப்ப நான் பைக்ல போயிக்கிட்டிருக்கேன்.... ஜோசியரைப் பாத்துட்டு ரிட்டர்ன் போயிக்கிட்டிருக்கேன்.... அவர் சொன்னது என்னால நம்பவே முடியல... நான் ஏதோ தோஷத்துக்கு உள்ளாயிருக்கேனாம்... என்னோட தோஷம் குழந்தையை எப்படி பாதிக்கும்னு கேட்டதுக்கு... பெத்தவங்க பண்ற நல்லது கெட்டது ரெண்டுமே அவங்க பசங்களுக்குத்தான் சேரும்னு பழமொழியைச் சொல்றாரு... சரி அப்படி நான் என்ன பாவம் பண்ணிட்டேன்னு கேட்டதுக்கு... நான் ஏதோ ஒரு கோயிலை இடிச்ச பாவம் பண்ணியிருக்கேன்னு சொன்னாரு... அவரு சொன்னது கரெக்ட்தான்... 2 வருஷத்துக்கு முன்னாடி ஒரு விக்டர் அபார்ட்மெண்ட்ஸ்னு ஒரு மல்டிப்ளெக்ஸ் கட்டினப்போ அங்க ஒரு சிவன் கோயிலிருந்தது... 20 கோடி ரூபா ப்ராஜக்டு. விட மனசு வரல அதனாலஅதை இடிக்க வேண்டிய கட்டாயத்துல இடிச்சிட்டுத்தான் அந்த அபார்ட்மெண்டை கட்டினேன்... ஆனா அது இப்போ அந்தப் பாவம் என் பொண்ணுக்கு கண்டமா வரும்னு நான் கனவுல கூட நினைச்சிப் பாக்கல...

அதைவிட அந்த ஜோசியர் சொன்ன பரிகாரம்தான் எனக்கு ரொம்பவும் ஆச்சர்யமா இருந்தது.... நான் இடிச்சி கட்டின அபார்ட்மெண்டுல இன்னமும் அந்தக் கோவிலோட அமைப்பு இருக்குதாம்... அந்த கோயிலைம்ஸத்தை நான் உணர்ந்து அந்த சிவன்கிட்ட வேண்டிக்கிட்டு அந்தக் கோவில் கொடிமரத்துல விழுந்தது கும்பிட்டா எனக்கு அந்த தோஷம் நீங்கிடுமாம்... என் பொண்ணுக்கும் உடம்பு சரியாயிடுமாம்... அதெப்படி நான் கட்டுன அபார்ட்மெண்டுல அந்தக் கோவில் இன்னமும் எப்படி இருக்கும் என்னால நம்பவே முடியல... இருந்தாலும் நேர்ல போயி பாக்கலாம்னு பைக்ல போயிக்கிட்டிருக்கேன்....

4 மணி நேரத்துக்குப் பிறகு...
என்னால நம்பவே முடியல... இப்ப நான் மறுபடியும் பைக்ல போயிக்கிட்டிருக்கேன்... இப்பத்தான் வீட்லருந்து ஃபோன் வந்தது... குழந்தைக்கு உடம்பு சரியாயிடிச்சாம்... எப்படின்னு நான் சொன்னா நீங்க நம்பவே மாட்டீங்க... நான் பைக்ல அந்த விக்டர் அபார்ட்மெண்டுக்கு போனதும் அது ரொம்ப சாதாரணமா நான் கட்டின பில்டிங்காத்தான் என் கண்ணுக்கு தெரிஞ்சது... இதுல நம்ம அந்தக் கோயில எங்க போயி தேடுறதுண்ணு யோசிச்சிக்கிட்டிருந்தேன்... சரி.. பில்டிங் மெயின்டனென்ஸ்னு சொல்லி உள்ளே போனேன்... என்ட்ரன்சுக்கு நடுவுல ஒரு வெல்கம் விநாயகரை வச்சிருந்தாங்க... அவரை வேண்டும்போதுதான் எனக்குள்ள ஒரு ஸ்பார்க் வந்தது... நான் இடிச்ச அந்தக் கோயில்லயும் இதே இடத்துலதான் விநாயகர் இருந்தாரு... அந்த இடிஞ்ச கோயிலோட அமைப்பை மனசுல நினச்சிக்கிட்டு இப்போ அந்த விக்டர் அபார்ட்மெண்ட்ஸை சுத்தி வர ஆரம்பிச்சேன்...

விநாயகரைத் தாண்டி உள்ளே போனப்ப எனக்கு இடப்பக்கத்துல அந்த கோயிலோட சின்ன குளம் இருந்ததா ஞாபகம்... திரும்பிப் பார்த்தப்போ ரொம்ப ஆச்சர்யமா இருந்தது... காரணம் அந்தக் குளம் இருந்த இடத்துலதான் இப்ப இந்த அபார்ட்மெண்டுக்கு வாட்டர் சப்ளை செய்ற சம்ப் இருந்தது... பில்டிங் உள்ள நுழைஞ்சதும் கோபுரம் இருந்த இடத்துல உள்பக்கமா துவாரமிட்டு இப்போ லிஃப்ட் இயங்கிக்கொண்டிருக்கு.. கிட்டத்தட்ட ஒரே அமைப்பு... நல்லா நினைவுப்படுத்தி முருகர் சிலை இருந்த இடத்துல போனேன்... அங்க இருந்த போர்ஷன்ல.. இப்ப ஒரு முருக பக்தர் குடியிருக்கார்.... சித்தர் சன்னதி இருந்த இடத்துல ஒரு க்ரிஸ்டியன் ஃபேமலி ஒரு இயேசுநாதர் சிலையிருந்தது... அவரும்கூட ஒரு சித்தர்தானே...

அந்தக் கோயிலோட பிரதான மூர்த்தியான சிவனைப் பார்க்கலாம்னு போன இடத்துல போர்ஷன் எதுவும் இல்லாம காலியா இருந்தது எனக்கு அதிர்ச்சியளித்தது... ஆனால்

இந்த பில்டிங்கை கட்டியது நான்தானே. க்ரவுண்ட் ப்ளோருக்கு வெளிச்சம் தேவைன்னு இந்த இடத்தை விட்டு வச்சது அப்பத்தான் ஞாபகம் வந்தது... இந்த இடத்துக்கு நேர்மேலே ஒரு போர்ஷன் இருப்பது தெரிஞ்சது... ஃபர்ஸ்ட் ப்ளோருல நான் நினைச்ச மாதிரியே ஒரு பெரிய பிஸினஸ்மேன் இருக்கிற வீட்ல. தவறாம பூஜை பண்ற அவரோட மனைவியின் கையால பூஜைகளை நடத்திக்கிட்டு சிவபெருமான் கம்பீரமா அந்தப் போர்ஷன்ல இருந்தாரு அவரைக் கும்பிட்டுக்கிட்டு அந்த பில்டிங்கை விட்டு வெளியே வந்தேன்...

இப்படி அந்த இடிஞ்ச கோயில்ல ஒவ்வொரு சன்னிதி இருந்த இடத்திலயும் இப்ப ஒவ்வொரு போர்ஷன்ல ஒரு சாமி சிலைகள் வெவ்வேறு வடிவத்துல பூஜைபுரஸ்காரத்தோட இருக்கிறத பாக்கும்போது எனக்கு புல்லரிச்சுது.. இந்த தெய்வம் என்கிற அப்பார்ப்பட்ட சக்தி எப்பவும் தனக்குண்டான அம்சங்களோட எப்பவும் இருந்துக்கிட்டுத்தான் இருக்குன்னு புரிஞ்சிக்கிட்டேன்...

எல்லாம் சரி... ஆனா ஜோசியர் பரிகாரமா நான் அந்தக் கோயிலோட கொடிமரத்துல விழுந்து வணங்கனும்னு சொன்னது ஞாபகம் வந்தது... கொடிமரம் எப்படி இங்க இருக்க முடியும்னு நான் நினைச்சப்போ... அந்த அபார்ட்மெண்டுக்கு எதிர்பக்கமா குழந்தைகள் விளையாடுற பார்க் கட்டியிருந்தாங்க... அந்த பார்க்ல... வானத்தை எட்டிப்பிடிக்கிற மாதிரி... ஒரு செல்ஃபோன் டவர் இருந்தது...

என் கண்ணுல நீர் வர்றதை என்னால கண்ட்ரோல் பண்ண முடியில... நேரே போயி அந்த செல்ஃபோன் டவருக்கு கீழ விழுந்துக் கும்பிட்டேன்... அப்பத்தான் வீட்லருந்து குழந்ததைக்கு உடம்பு சரியானதா ஃபோன் வந்தது... இப்ப நான் வீ்ட்டுக்கு பைக்கல சந்தோஷமா போயிக்கிட்டிருக்கேன்...

------------------

5 comments:

Anonymous said...

Nice Story. Keep it up..

Anonymous said...

Hai Harish

Nice Stories

Regards
Saravanan

Aru said...
This comment has been removed by the author.
Aru said...

Hi Harish,

It's very nice story. Ur creative thinking is also very nice.

Unknown said...

Hi Harish

It's really nice and interesting to read.

Hemanraj